search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் என்ஜின்"

    • ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய 1 மற்றும் 2 நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
    • ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேத்துப்பட்டு ரெயில் பணிமனையில் இருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தடம்புரண்டது.


    இதையடுத்து ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது.
    • ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து, அசாம் மாநிலத்திற்கு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பொருட்கள் இருப்பு வைக்கும் சரக்கு பெட்டியில் பழம் நிரப்பப்பட்ட பெட்டிகள் மற்றும் பழ மூட்டைகள் ஏற்றப்பட்டன.

    அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுமதி செய்யப்பட்டதால், ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் ரெயில் மெதுவாக சென்றது.

    இதுகுறித்து எஞ்சின் டிரைவர் காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்ததும் நிறுத்தப்பட்டது.

    அப்போது தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சரக்கு பெட்டியில் இருந்த பழ மூட்டைகளை பாதி இறக்கினர்.

    இதனையடுத்து ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர்.
    • என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.50 மணிக்கு தண்டவாளம் மற்றும் மின்வயர்களை சரிபார்த்து ஆய்வு செய்ய என்ஜின் வந்தது. லூப் தண்டவாளத்தில் இருந்து முதல் நடைமேடைக்கு சென்ற போது திடீரென ரெயில் என்ஜீனின் 2 சக்கரங்கள் தடம் புரண்டது. இதையடுத்து ஆய்வு செய்ய வந்த என்ஜீன் அந்த தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது.

    இதுபற்றி உடனடியாக பொன்னேரி ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில்வேபணிமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர். பின்னர் அந்த என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.

    இதனால் இன்று காலை சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அதிகாலையில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்றன. அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் ரெயில்சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ஏற்கனவே நேற்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் அருகே வந்தபோது அதன் ஒரு பெட்டி தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

    ×